articles

img

ஊர் சுற்று - கோவி.பால.முருகு

சிங்காரச் சென்னைக்குப்  போகப் போறேன்-அங்கே      

சீர்மிகுந்த இடங்களையேப் பார்க்கப் போறேன்! மங்காத மெரினாபீச் போகப் போறேன்-அங்கே      

  மனங்குளிர அலைநனைந்து  நிற்கப் போறேன்!   தலைவர்களின் நினைவிடங்கள் பார்க்கப் போறேன்-அந்த  

   தலைவர்களின் புகழ்களையும் அறியப் போறேன்!  நிலைத்தபுகழ்  பெரியோர்சிலை பார்க்கப் போறேன்-அவர்      

 நினைவுகளை நெஞ்சினிலே  போற்றப் போறேன்!    பல்கலைக் கழகத்தைப் பார்க்கப் போறேன்-அங்கே          

படித்துபுகழ் பெற்றிடவே நினைக்கப் போறேன்!  வள்ளுவரின் கோட்டமங்கேப்  போகப் போறேன்-புகழ்    

       வள்ளுவரின் தேரழகைப் பார்க்கப் போறேன்!  அருங்காட்சி யகத்திற்குப் போகப் போறேன்-அங்கே அரியபொருள் அத்தனையும் பார்க்கப் போறேன்! சிறுவர்களின் பூங்காவிற்குச் செல்லப் போறேன்-அங்கே      

     சிரித்துமனம்  களித்திடவே ஆடப் போறேன்!  உயிரியல்  பூங்காவிற்குச் செல்லப் போறேன்-அங்கே        

  உலவுகின்ற விலங்குகளைக் காணப் போறேன்! பயிற்றுகின்ற நூலகங்கள் செல்லப் போறேன்-அங்கே    

      பல்வகையாம் நூல்களையும் படிக்கப் போறேன்!  சுற்றிவந்து பார்ப்பதற்கு பலநாள்  வேண்டும்-அதைச்          

சுற்றிப்பார்த்து களிப்பதற்கு  எண்ணம் தூண்டும்! சுற்றிநிற்கும் தடைகளையே உடைக்கப் போறேன் -ஊர்        

 சுற்றிவந்து அனைத்துயுமே பார்க்கப் போறேன்!